Friday, May 3, 2013

சர்க்கரை வலி

பால் குடிக்கையில் பிள்ளை
மார் கடிக்கும் தாயின்பம்
 
உறங்கிய தந்தை முதுகில்
குதித்தாடும் பிள்ளை பாதம்
 
தந்தை முத்தம் நடுவே
குறும்பு செய்யும் மீசை
 
கொட்டும் மழை நடுவே
சுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை 
 
மறந்து போன கனவை 
மீண்டும் பார்த்துவிடும் ஆசை
 
கட்டெறும்பு முத்தமிட்ட கண் இமை
சொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை…
 
காதலித்ததுண்டா?
காதல் வலி கொண்டதுண்டா?
எல்லோரும் ரசிக்கின்ற வலி
காதல்…நானும்…

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்