Friday, April 19, 2013

முடிந்த இரவு விடியாத பகல்

அழுத பிள்ளை உணவு உண்ணவென
வானம் வந்த நிலா…
இன்னும் விழித்து கிடக்கிறது
பிள்ளை உறங்கும் அழகை ரசித்தபடி…

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு முத்தமென
எண்ண தொடங்கிய காதலர்கள்
எண்ணுவதை மட்டும் விட்டுவிட
பரிமாறிக்கொண்ட முத்தங்கள் நட்சத்திரமாய்

“தூங்கிட்டியா செல்லம்” அவள் விரல் மடலில்
உறங்கவே தொடங்காத அவன் இரவு
இரண்டு மணிக்கெல்லாம் விடிந்து விடுகிறது…

எல்லோருக்குமான  இரவு நகர்ந்து கொண்டிருக்க
இவனுக்குமட்டும்மேனோ
தூண்டில் முள் முழுங்கிய மீனின் ரணமாய்
இரவு முடியவும் இல்லை  பகல் விடியவும் இல்லை

இரவு பண்ணிரெண்டானால் என்ன?
பரவாயில்லை நான் அனுப்பிய
குட்மார்னிங் குறுஞ்செய்திக்கு பதிலனுப்பி
என் நேற்றை விடிய விடு…
இல்லை போனால் போகட்டும்
சற்று முன் அனுப்பிய ஸ்வீட் ட்ரீம்ஸ்க்காவது
பதிலனுப்பி இன்றை முடிய விடு 
நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தி ஸ்மைலி
என்னை சிரித்து கொல்லுதடி…
முடியாத இந்த நாள் என்னை
எங்கோ இழுத்து செல்லுதடி

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்