Tuesday, May 8, 2012

பேருந்துக் காதல் - IV

|பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1 | 2

ஐந்து  நிமிடம் 
அரை நொடி போல் முடிந்து போன 
அந்த பேருந்து பயணத்தில் 
என் மொத்த வாழ்கையும் 
வாழ்ந்துவிட்ட நிறைவு...

என்  இருதயம் போல்
காலியாக என் இருக்கையும்...
என் இருதயத்திலும் இருக்கையிலும் 
இடம் பிடித்தாள் அவள்...

நீலகண்டனின் நெற்றிக் கண்ணில்
எரிந்து போன நக்கீரரை 
மீண்டும் எழுப்பி அவள் கூந்தலில் 
இயற்கையிலையையே மணமுண்டு என்று 
வம்பிழுக்கும் ஆசை கொண்டேன்...
மோதிப் போன உந்தன் கூந்தல் முகர்ந்த பின்னே

முதல்  முறை இந்திய சாலைகளின்
அருமை உணர்ந்தேன்...


பற்றாமல்  உரசி வந்தோம்
பஞ்சும் நெருப்பும்...
விலகி அவள் போன பின்பு
பற்றி எரியும் காதல் உணர்ந்தேன்...

பெருந்துத்  தரையின் அதிர்வில்
என் இருதயமும் அவள் இருதயமும் மோதிக்கொள்ள
என் எண்ண சுனாமி எழுந்து
இழுத்து செல்லுது என்னை கனவுக் கடலுக்குள்...


இறுதி வரை உன் முகம் பார்க்கவில்லை
அனால் நீ விட்டுசென்ற வாசம் சொல்லியது
உன் முகவரி முழுதாய்...

 இது வரை வெட்டியாய் மட்டுமே இருந்த
என்டெய்லி ஸ்க்கெடுலில்
6:14 pmல் இந்த பேருந்து பயணத்தை
சேர்த்துவிட்டு  போனாள்...

1 comment:

  1. கவிதை
    காதல் ம்ம்ம் அருமை

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்